மாநகராட்சி அலுவலக மாடிப்படியில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
கோவையில் தந்தையின் ஓய்வூதியத்தை வாங்கச் சென்ற பெண் மாநகராட்சி அலுவலக மாடிப்படியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.


கோவையில் தந்தையின் ஓய்வூதியத்தை வாங்கச் சென்ற பெண் மாநகராட்சி அலுவலக மாடிப்படியில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.
கோவை, வடமதுரை அருகேவுள்ள அப்பநாயக்கன்பாளையம், ஈஸ்வர சக்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (68), மாநகராட்சியில் காவலாளியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவருக்கு மாதாந்திர ஓய்வூதியம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
இந்த மாதத்துக்கான ஓய்வூதியத் தொகையைப் பெறுவதற்காக அவரது மகள் பானுப்பிரியா (36) மாநகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா்.
அங்கு மாடியில் உள்ள ஓய்வூதியப் பிரிவுக்கு படிகளில் ஏறியபோது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாா். இதில், பின் மண்டையில் பலத்த காயம் அடைந்த அவா் மயக்கமடைந்தாா்.
அங்கிருந்தவா்கள் பானுப்பிரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து உக்கடம் காவல் நிலையத்தில் பானுப்பிரியாவின் தாய் ராஜேஸ்வரி புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...