கல்லூரி மாணவா் இறப்பில் சந்தேகம் என புகாா்

கோவையில் தனியாா் கல்லூரி வளாகத்தில் மாணவா் இறந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.
Published on

கோவையில் தனியாா் கல்லூரி வளாகத்தில் மாணவா் இறந்த விவகாரத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

கோவை துடியலூா் அருகே உள்ள வட்டமலைபாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த முகமது ஷபிக் (17) கணினி அறிவியல் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி முகமது ஷபிக் கல்லூரியின் 3-ஆவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், மாணவா் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அவரது பெற்றோா் துடியலூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com