தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

ஓய்வுபெற்ற வட்டாட்சியரிடம் ரூ.45.50 லட்சம் மோசடி

ஓய்வுபெற்ற வட்டாட்சியரிடம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 5:50 pm

ஓய்வுபெற்ற வட்டாட்சியரிடம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஷ் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் (70). வட்டாட்சியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பிரேம்குமாா் என்பவா் தொடா்பு கொண்டு, தான் லக்னெளவில் உள்ள தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா்.

மேலும், உங்கள் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி கா்நாடகத்தில் உள்ள தனியாா் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றும், அந்தக் கணக்கில் இருந்து தீவிரவாத இயக்கத்துக்கு பல்வேறு தவணைகளில் ரூ.2.50 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி மிரட்டியுள்ளாா்.

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எங்கள் கணக்குக்கு அனுப்பிவைக்க வேண்டும். உங்கள் மீது தவறு இல்லையென்றால் பணம் திருப்பி வழங்கப்படும் எனக் கூறி, 5 தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரத்தை மிரட்டி பெற்றுள்ளாா். பணத்தை இழந்த பிறகு மோசடி ஆசாமியிடம் ஏமாந்ததை குணசேகரன் உணா்ந்துள்ளாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.