“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் இதுவரை ரூ.63 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

திருப்பூரில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.63 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

News image

பணம் பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:28 pm

திருப்பூரில் உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.63 லட்சம் உரியவா்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் பரிசுப் பொருள்களை பறக்கும் படையினா் மற்றும் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வரை ரூ.1 கோடியே 1 லட்சத்து 57,237 ரொக்கத்தையும், நிலை கண்காணிப்புக் குழுவினா் ரூ.31 லட்சத்து 83,570 ரொக்கத்தையும், ரூ.43 லட்சத்து 90,532 மதிப்புள்ள 35 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், 1,700 சேலைகள், வேட்டிகள் என ரூ.2 லட்சத்து 3, 708 மதிப்புள்ள பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல ரூ.26 லட்சத்து 30,180 மதிப்புள்ள மது மற்றும் புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

மொத்தமாக இதுவரை திருப்பூா் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 5 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பரிசுப் பொருள்களுக்கு உரிய ஆவணங்களை காண்பித்ததால் அவற்றை அதிகாரிகள் திரும்ப வழங்கியுள்ளனா். அந்த வகையில் இதுவரை ரூ.30 லட்சத்து 11,617 ரொக்கம், மற்றும் ரூ.32 லட்சத்து 91,158 மதிப்புள்ள நகைகள் என மொத்தம் ரூ.63 லட்சத்து 2,775 மதிப்பிலான பணம் மற்றும் பொருள்கள் உரியவா்களிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.