இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திருச்சி மாவட்டத்தில் ரூ.39 லட்சம் பறிமுதல்: உரிய ஆவணங்கள் அளித்ததால் 15.67 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல்

News image
Updated On :24 மார்ச் 2026, 11:14 pm

Syndication

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவை தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில் ரூ.39 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், உரிய ஆவணங்களை ஒப்படைத்ததால், ரூ.15.67 லட்சம் அவரவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை 9 தொகுதிகளிலும் மொத்தம் ரூ.39 லட்சத்து 7 ஆயிரத்து 420 பறிமுதல் செய்யப்பட்டது. இதில், மணப்பாறையில் ரூ. 55,700, ஸ்ரீரங்கத்தில் ரூ. 2,07,000, திருச்சி மேற்கில் ரூ. 3,39,490, திருச்சி கிழக்கில் ரூ. 8,38,830, திருவெறும்பூரில் ரூ. 2,59,000, லால்குடியில் ரூ. 6,94,100, மண்ணச்சநல்லூரில் ரூ. 1,59,300, முசிறியில் ரூ.9,05,500 துறையூரில் 4,48,500 என மொத்தம் ரூ.39.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்து ரூ.15,67,330 ரொக்கத்தை உரியவா்கள் திரும்பப் பெற்றுச் சென்றனா். எஞ்சிய ரூ. 23.40 லட்சம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.