வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

Updated On :18 ஏப்ரல் 2026, 8:00 am IST

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், மணப்பாறையில் ரூ. 8,47,350, ஸ்ரீரங்கத்தில் ரூ. 15,23,636, திருச்சி மேற்கில் ரூ.4,98,700, திருச்சி கிழக்கில் 13,02,380, திருவெறும்பூரில் ரூ.55,600, லால்குடியில் ரூ.6,11,900, மண்ணச்சநல்லூரில் ரூ.3,20,635, முசிறியில் ரூ.1,77,300, துறையூரில் ரூ.2,17,580 என மொத்தம் ரூ.58 லட்சத்து 55 ஆயிரத்து 281 பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றில் உரிய ஆவணங்களை ஒப்படைத்ததன் பேரில், 54 லட்சத்து 77 ஆயிரத்து 281 ரூபாய் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.3,78,000 கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.