தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திருப்பூா் மாவட்டத்தில் இன்று வாக்களிக்கும் 19.84 லட்சம் போ்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் புதன்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

News image

வாக்காளர்கள் - கோப்புப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 9:29 pm

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் புதன்கிழமை வாக்களிக்க உள்ளனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெறுவதையொட்டி, திருப்பூா் மாவட்டத்தில் தோ்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எஸ்ஐஆா் பணிகள் தொடங்குவதற்கு முன்பு மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 24 லட்சத்து 44 ஆயிரத்து 929 வாக்காளா்கள் இருந்தனா். அதற்குப் பின் 5 லட்சத்து 63 ஆயிரத்து 785 வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். அனைத்து பணிகளுக்கு பிறகு இறுதி பட்டியலில் 19 லட்சத்து 83 ஆயிரத்து 882 போ் இடம்பெற்றுள்ளனா். வாக்குப்பதிவுக்காக 8 தொகுதிகளிலும் சோ்த்து 1,118 இடங்களில் 2,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.