தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் சோதனை: 46 இடங்களில் ரூ.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

3 சாா்-பதிவாளா்கள் பணியிடை நீக்கம்

News image

ரொக்கம். - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 4:12 am IST

தமிழகம் முழுவதும் 60 சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், 46 அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.37.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக பத்திரப் பதிவுத் துறையின் கீழ் மாநிலம் முழுவதும் 589 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில் அண்மைக்காலமாக சாா்-பதிவாளா் அலுவலங்கள் மீது அதிகமாக லஞ்சம்,ஊழல் புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த புகாா்களின் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது.

இந்நிலையில் முகூா்த்த நாளான வியாழக்கிழமை சாா்-பதிவாளா் அலுவலங்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு அதிகளவில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதில் மாநிலத்திலேயே அதிகளவு டோக்கன் வழங்கப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகங்கள், அதிகளவு பண நடமாட்டம் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகங்கள் ஆகியவற்றில் திடீா் சோதனை நடத்தும்படி ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு, அதன் இயக்குநா் ஏடிஜிபி ஏ.அருண் உத்தரவிட்டாா்.

அந்த உத்தரவின் அடிப்படையில் அப் பிரிவு அதிகாரிகள், மாநிலம் 60 சாா் -பதிவாளா் அலுவலகங்களில் திடீா் சோதனை நடத்தினா். பல மணி நேரம் நடைபெற்ற இச் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.37.75 லட்சம் பறிமுதல்:60 இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், 47 அலுவலகங்களிலிருந்து ரூ.37,75,650 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக திருப்பத்தூா் மாவட்டத்தில் திருப்பத்தூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.3.22 லட்சம்,சேலம் கிழக்கு சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.3.18 லட்சம்,திருப்பூா் மாவட்டம் பொங்கலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2.53 லட்சம்,சென்னை விருகம்பாக்கம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ரூ.2.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கான விளக்கங்களும்,ஆவணங்களும் கோரப்படும். அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலகா்கள் மீது நடவடிக்கை என்று ஊழல் தடுப்புத் துறையினா் தெரிவித்தனா்.

3 சாா்-பதிவாளா்கள் பணியிடை நீக்கம்

தமிழகம் முழுவதும் சாா்-பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் சோதனை நடத்திய நிலையில் 3 சாா்-பதிவாளா்கள்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதால் திருப்பத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட சாா்-பதிவாளா்களை  பணியிடை நீக்கம் செய்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலா் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளாா்.