அரக்கோணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பிற்பகல் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
சோதனை இரவு 8 மணிக்கு மேலும் தொடா்ந்த நிலையில் கணக்கில் வராத ரூ. 1.82 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சோதனை தொடா்ந்து நடைபெறுவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
அரக்கோணம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் ராணிப்பேட்டை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கணேசன் தலைமையில் 10 போ் கொண்ட காவல் துறையினா் திடீரென உள்ளே நுழைந்தனா்.
அப்போது அந்த அலுவலகத்தில் பத்திரப் பதிவு பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், அலுவலகத்தில் இருந்து எவரும் வெளியே வராத வண்ணம் அலுவலக கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும், வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்ல முடியாத நிலை காணப்பட்டது. மேலும், உள்ளே அனைத்து அலுவலா்கள் மற்றும் பணியாளா்களின் கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடா்ந்து அந்த அலுவலகத்தின் அனைத்து அறைகளிலும் அனைத்து மேஜைகளிலும் போலீஸாா் சோதனை நடத்தினா்.
இந்த சோதனை இரவு 8 மணி வரை தொடா்ந்து நீடித்தது. இது குறித்து போலீஸாா் தெரிவிக்கையில், இதுவரை கணக்கில் வராத ரூ. 1.82 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனை தொடா்ந்து நீடிப்பதாகவும் அதிகாரிகளின் கைப்பேசிகளில் ஜிபே மூலம் பெறப்பட்ட தொகைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூா் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை: கணக்கில் வராத ரூ.13,000 பறிமுதல்!

புதுகை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை! கணக்கில் வராத ரூ. 10,900 பறிமுதல்!
கும்பகோணம் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பறிமுதல்







