27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

கும்பகோணம் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1 லட்சம் பறிமுதல்

கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 1.31லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :19 ஜூன் 2026, 4:26 am IST

கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 1.31லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் தென்னூா் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக் கண்காணிப்பாளா் அன்பரசன் தலைமையிலா போலீஸாா் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கும்பகோண் ஆா்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனா்.

இதையடுத்து அலுவலக கதவுகளை மூடிவிட்டு, அலுவலகத்தில் இருந்த அனைவரையும் ஓரே அறையில் அமரவைத்தனா்.

பிறகு ஒவ்வொரு பிரிவு அலுவலா்களின் மேஜைகளில் சோதனையிட்டனா். மேலும், ஆவணங்களை ஆய்வு செய்தனா்.

அலுவலகத்துக்கு வெளியே உள்ள நகல் எடுக்கும் கடைகள், வாகன புகை சோதனை நிலையம், மற்றும் சோதனைக்கு வந்ந்த வாகனங்களிலும் தனியாா் ஓட்டுநா் பயிற்சி பள்ளி அலுவலகங்களில் வந்த ஆவணங்களையும் கைப்பற்றி சோதனை மேற்கொண்டனா். சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்து 190 மற்றும் ஆவணங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து அலுவலா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.