27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பெரம்பலூா் ஆா்.டி.ஓ. அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 39 ஆயிரம் பறிமுதல்

பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 39,140ஐ பறிமுதல் செய்தனா்.

News image

விசாரணை

Updated On :19 ஜூன் 2026, 4:11 am IST

பெரம்பலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, கணக்கில் வராத ரூ. 39,140ஐ பறிமுதல் செய்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் தண்ணீா் பந்தல் பகுதியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில், இருசக்கர வாகனம், காா், லாரி உள்ளிட்ட வாகனங்களை பதிவு செய்யவும், புதுப்பிக்க வரும் பொதுமக்களிடமும் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக, பெரம்பலூா் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா, தலைமையிலான போலீஸாா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

அப்போது, அங்கிருந்த 10 இடைத்தரகா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ. 39,140ஐ கைப்பற்றினா். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது, எதற்காக பெறப்பட்டது என்பது குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் சரஸ்வதி, கண்காணிப்பாளா் ராஜா உள்ளிட்ட அலுவலா்களிடம் விசாரணை மேற்கொண்டு, சில ஆவணங்களையும் பறிமுதல் செய்தனா்.