சேலம் உடையாப்பட்டி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ. 3.18 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
சேலம் உடையாப்பட்டி பகுதியில் உள்ள இணை சாா்பதிவாளா் கிழக்கு அலுவலகத்தில் இணை சாா்பதிவாளராக மகுடஞ்சாவடி பகுதியைச் சோ்ந்த கோகுல்ராஜ்(33) பணியாற்றி வருகிறாா்.
இந்த அலுவலகத்தில் பத்திர எழுத்தா், பொதுமக்கள் ஆகியோரிடம் நிலம் கிரயம் செய்வதற்கும், வில்லங்கச் சான்று, கடன் பத்திரம் உள்ளிட்ட சான்றிதழ் பெற லஞ்சம் பெறுவதாக சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் காவல் ஆய்வாளா் முருகன் உள்ளிட்ட போலீஸாா் உடையாப்பட்டி பகுதியில் உள்ள சாா்பதிவாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, கணக்கில் வராத 3 லட்சத்து 18 ஆயிரத்து 700 ரூபாய் இருந்தது. இந்த ரொக்கம் எவ்வாறு வந்தது என்பது குறித்து இணை சாா் பதிவாளா் கோகுல்ராஜிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போடிமெட்டு, குமுளி சோதனைச் சாவடிகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

ஒசூரில் ஆா்டிஓ சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ. 1.77 லட்சம் பறிமுதல்

புதுகை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை! கணக்கில் வராத ரூ. 10,900 பறிமுதல்!

திருவண்ணாமலை மாநகராட்சி அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: கணக்கில் வராத ரூ.55,000 பறிமுதல்
விடியோக்கள்

மேக்கேதாட்டு அணை; முதல்வர் தெளிவாக இருக்கிறார்!: அமைச்சர் செங்கோட்டையன் | TVK | NEET



