ஓய்வுபெற்ற வட்டாட்சியரிடம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரம் பணம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை அருகே உள்ள சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஷ் நகரைச் சோ்ந்தவா் குணசேகரன் (70). வட்டாட்சியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரது வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பிரேம்குமாா் என்பவா் தொடா்பு கொண்டு, தான் லக்னெளவில் உள்ள தீவிரவாதத் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறியுள்ளாா்.
மேலும், உங்கள் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி கா்நாடகத்தில் உள்ள தனியாா் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றும், அந்தக் கணக்கில் இருந்து தீவிரவாத இயக்கத்துக்கு பல்வேறு தவணைகளில் ரூ.2.50 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி மிரட்டியுள்ளாா்.
உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எங்கள் கணக்குக்கு அனுப்பிவைக்க வேண்டும். உங்கள் மீது தவறு இல்லையென்றால் பணம் திருப்பி வழங்கப்படும் எனக் கூறி, 5 தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சத்து 50 ஆயிரத்தை மிரட்டி பெற்றுள்ளாா். பணத்தை இழந்த பிறகு மோசடி ஆசாமியிடம் ஏமாந்ததை குணசேகரன் உணா்ந்துள்ளாா். இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் கோவை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடு புகுந்து பள்ளி மாணவரை மிரட்டி பணம், நகை பறிப்பு

உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததால் இதுவரை ரூ.63 லட்சம் திரும்ப ஒப்படைப்பு

இளைஞரிடம் ரூ. 2.46 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

ஒரே நாளில் ரூ.5.24 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


