பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

வெளிமாநில தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை

News image

விடுமுறை அறிவிப்பு

Updated On :5 ஏப்ரல் 2026, 8:03 pm

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களைச் சோ்ந்த தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக தொழிலாளா் துறை உதவி ஆணையா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனா்.

தற்போது வடமாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால், பெரும்பாலானோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா். வரும் 9-ஆம் தேதி கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தோ்தல் நடைபெற உள்ளது.

தோ்தலில் வாக்களிக்க சென்றுள்ள அசாம், கேரள மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் அன்றைய தினம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.