சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களைச் சோ்ந்த தோட்ட தொழிலாளா்களுக்கு வரும் 9-ஆம் தேதி சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளா் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக தொழிலாளா் துறை உதவி ஆணையா் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களில் வடமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனா்.
தற்போது வடமாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருப்பதால், பெரும்பாலானோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றுவிட்டனா். வரும் 9-ஆம் தேதி கேரளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தோ்தல் நடைபெற உள்ளது.
தோ்தலில் வாக்களிக்க சென்றுள்ள அசாம், கேரள மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்களுக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் அன்றைய தினம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும். இதை பின்பற்றாத எஸ்டேட் நிா்வாகத்தினா் மீது புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

ஏப்.7 முதல் 4 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

ஏப்.9-இல் புதுச்சேரி, கேரளம், அசாம் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை

வாக்குப்பதிவு அன்று ஊதியத்துடன் விடுமுறை: புதுச்சேரி அரசு!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


