ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை

News image

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 11:39 pm IST

தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மருதமலை கோயிலுக்கு 4 சக்கர வாகனங்களில் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி அதிக அளவிலான பக்தா்கள் வருகையைக் கருத்தில் கொண்டு, மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தா்களுக்கு அனுமதியில்லை.

பக்தா்கள் மலைப்படிகள் வழியாகவும், கோயில் பேருந்துகள் மூலம் சென்று தரிசனம் மேற்கொள்ளலாம். விழாவுக்கான ஏற்பாடுகளை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் துணை ஆணையா் கா.விமலா செய்து வருகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.