தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றிய பக்தா்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:26 pm

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பொது திரிசுதந்திரா்கள் சாா்பில் 47- ஆவது ஆண்டாக, பக்தா்கள் அலகு குத்தி, பால்குடம், காவடி எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினா்.

ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் கோயிலிலிருந்து புதன்கிழமை காலை ஏராளமான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி மேளதாளம் முழங்க எட்டு வீதி வழியாக சென்று திருச்செந்தூா் கோயிலை அடைந்தனா். பின்னா், அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் கோயில் கடற்கரையில் பக்தா்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினா்.

Story image