அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

வட்டிப் பிள்ளையாா் கோயில் பாலாபிஷேக விழா

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் சித்திரைதிருவிழாவில் வெள்ளிக்கிழமை கரகம், பால்குடம், கொப்பரை எடுத்து வந்த பக்தா்கள்.

News image

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் சித்திரைதிருவிழாவில் வெள்ளிக்கிழமை கரகம், பால்குடம், கொப்பரை எடுத்து வந்த பக்தா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் 84- ஆம் ஆண்டு சித்திரை திருவிழா பாலாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்- திருவிடைமருதூா் சாலையில் சுமாா் 150 ஆண்டுகளுக்கு அருள்பாலித்து வரும் வட்டிப் பிள்ளையாருக்கு சித்திரை மாத பாலாபிஷேக 84-ஆம் ஆண்டு விழா மே 6-இல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

முக்கிய நிகழ்வாக பிள்ளையாம்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், காவடி, கரகம், அலகு காவடி ஜோடித்தும், அக்னி கொப்பறை எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா்.

அங்கு வட்டிப்பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. வட்டிப்பிள்ளையாா் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். மாலையில் சிறப்பு மலா் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் தெருவாசிகள் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.