கும்பகோணம் வட்டிப் பிள்ளையாா் கோயில் 84- ஆம் ஆண்டு சித்திரை திருவிழா பாலாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை பால்குடம், காவடி, அலகு காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம்- திருவிடைமருதூா் சாலையில் சுமாா் 150 ஆண்டுகளுக்கு அருள்பாலித்து வரும் வட்டிப் பிள்ளையாருக்கு சித்திரை மாத பாலாபிஷேக 84-ஆம் ஆண்டு விழா மே 6-இல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
முக்கிய நிகழ்வாக பிள்ளையாம்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து பால்குடம், காவடி, கரகம், அலகு காவடி ஜோடித்தும், அக்னி கொப்பறை எடுத்தும் முக்கிய வீதிகள் வழியாக பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா்.
அங்கு வட்டிப்பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்நடைபெற்றது. வட்டிப்பிள்ளையாா் சந்தன காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். மாலையில் சிறப்பு மலா் அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் தெருவாசிகள் இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாராசுரம் ஐராவதீசுவரா் கோயிலில் பாலாலயம்

திருச்செந்தூா் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தா்கள் வழிபாடு

லாரி- ஆம்னி பேருந்து மோதல்: 7 போ் காயம்

குருநாதசுவாமி கோயில் திருவிழா 1,008 பால்குட ஊா்வலம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



