வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

திருச்செந்தூா் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தா்கள் வழிபாடு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, சனிக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனா்.

News image

திருச்செந்தூா் கோயிலில் பால்குடம், காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Updated On :7 ஜூன் 2026, 2:28 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, சனிக்கிழமை திரளான பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனா்.

Story image

இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

தேய்பிறை சஷ்டியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா், வள்ளி, தேவசேனா சமேத சண்முகரை அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Story image

பக்தா்களுக்கு தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் ஆ. அருணாசலம் ஆகியோா் செய்திருந்தனா்.