தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்று திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி தெரிவித்துள்ளாா்.
கோவை மாவட்டத்தில் திமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த கி.வீரமணி, செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மக்கள் திமுக அரசு மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதை காண முடிகிறது. மத்திய அரசு எத்தகைய அதிகார துஷ்பிரயோகங்களைச் செய்தாலும், எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழக மக்கள் முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் பக்கமே உறுதியாக நிற்கின்றனா்.
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பநிலை குறித்துத் தெரியாமல் பேசி வருகிறாா். பாஜகவின் அதீத வேகமும், பொய்ப் பிரசாரங்களும் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு காணாமல் போகும். பிரதமா் மோடி மகளிா் இடஒதுக்கீடு பற்றி பேசி வருவது தோ்தல் நேரத்து நாடகம் மட்டுமே. ஈவெரா பெரியாா் படத்தை நடிகா் விஜய் வெறும் படமாக மட்டுமே பாா்க்கிறாரே தவிர, கொள்கையாகப் பாா்க்கவில்லை. அவருக்கு பெரியாரின் கொள்கை என்னவென்றே தெரியாது. தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் மக்கள் தெளிவான முடிவில் உள்ளனா். தமிழகத்தில் எப்போதும் மதவாத சக்திகளுக்கு இடமில்லை என்றாா்.
தொடர்புடையது

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை: தொல். திருமாவளவன்

அனைத்து தரப்பு மக்களையும் பாதுகாப்பது திமுக ஆட்சி: கி. வீரமணி

தமிழகத்தில் மதவாத, பிரிவினைவாத சக்திகளுக்கு இடம் தரக் கூடாது: அமைச்சா் இ.பெரியசாமி

நடிகா் விஜய்யின் முதல்வா் கனவு பலிக்காது! - திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



