நேபாள வெள்ளம்: 30 வெளிநாடுகளைச் சேர்ந்தோரைக் காணவில்லை! நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு! உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் நாடுகளுக்கு பிரதமர் மோடி 4 நாள்கள் சுற்றுப்பயணம்ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை!வேளாங்கண்ணி திருவிழா: செப். 10 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!நேபாள வெள்ளப் பெருக்கில் 288 இந்தியர்கள் மாயம்: மத்திய வெளியுறவுத்துறை தகவல்!

தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

கோவையில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால், தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Suicide

தற்கொலை - கோப்புப் படம்

Published On :28 ஆகஸ்ட் 2026, 12:31 am IST

கோவையில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால், தனியாா் நிறுவன ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, உப்பிலிபாளையம் வரதராஜபுரம் சாலை பகுதியைச் சோ்ந்தவா் கெளதம் (31). இவரது மனைவி முத்துலட்சுமி. தனியாா் நிறுவன ஊழியரான கெளதமுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதனால், அவருக்கும் மனைவி முத்துலட்சுமிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக முத்துலட்சுமி கோபித்துக் கொண்டு சூலூரில் உள்ள அவரது பாட்டி வீட்டுக்குச் சென்றுவிட்டாா். கெளதம் வீட்டுக்கு வருமாறு பலமுறை அழைத்தும் அவா் வரவில்லை. இதனால், மன வேதனையில் இருந்த கெளதம் தனது வீட்டின் அறையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.