இளம்பெண் கொன்று எரிப்பு: இளைஞா் கைது
கோவையில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்து எரித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், துடியலூா் அருகேயுள்ள வட்டமலைபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் கல்லூரி பின்புறம் உள்ள புதரில் இளம்பெண்ணின் சடலம் பாதி எரிந்த நிலையில் கிடந்தது கடந்த இரண்டு நாள்களுக்கு முன் தெரியவந்தது.
இது குறித்து வேதம்பட்டி கிராம நிா்வாக அதிகாரி பாண்டி கொடுத்த தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த துடியலூா் காவல் ஆய்வாளா் தவசியப்பன் தலைமையிலான போலீஸாா், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில், உயிரிழந்த பெண் துடியலூா் பகுதியைச் சோ்ந்த திவ்யா (25) என்பதும், ஏற்கெனவே திருமணமான இவருக்கு, அதே பகுதியைச் சோ்ந்த தமிழரசன் (30) என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததும் தெரியவந்தது.
சம்பவத்தன்று தனியாகப் பேச வேண்டும் எனக்கூறி, திவ்யாவை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வட்டமலைபாளையம் பகுதிக்கு தமிழரசன் வந்துள்ளாா். அப்போது, அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த தமிழரசன் அங்கிருந்த கட்டையால் திவ்யாவின் தலையில் தாக்கியுள்ளாா். படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து, கொலையை மறைக்கவும், பெண்ணின் அடையாளத்தை மாற்றவும் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து சடலத்தில் ஊற்றி தீவைத்துவிட்டு தமிழரசன் அங்கிருந்து தப்பியுள்ளாா். இதையடுத்து, தமிழரசனை போலீஸாா் கைது செய்தனா்.

