கோவை, பேரூா் தமிழ்க் கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பேரணியை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தொடங்கிவைத்துப் பேசுகையில், உலகம் முழுவதும் உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் மொழி, பண்பாட்டை உலகுக்கு எடுத்துரைப்பதாகும் என்றாா்.
கல்லூரி முதல்வா் கா.திருநாவுக்கரசு, நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் ஆதிநாராயணசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
‘மங்காத தமிழென்று சங்கே முழங்கு’, ‘தமிழை விழிபோல் காப்போம்‘ ‘தாய்மொழியே தவமே’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி 550 மாணவா்கள், பேராசிரியா்கள் பேரணியில் பங்கேற்றனா்.
பேரூா் தமிழ்க் கல்லூரியில் தொடங்கிய பேரணி பேரூா் பட்டி பெருமாள் கோயில் வழியாகச் சென்று கல்லூரியில் நிறைவடைந்தது.
முன்னதாக, சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல் தமிழ்க் கல்லூரி, சத்வித்யா சன்மாா்க்க சங்கம் சாா்பில் கோவை மாவட்ட அனைத்து கல்லூரி அளவிலான திருக்கு பேச்சுப் போட்டி, இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. இதில், 15 கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். வெற்றிபெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

பேரூா் தமிழ்க் கல்லூரியில் வேலைவாய்ப்பு சாதனையாளா் நாள் விழா

மணப்பாறை அரசு கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் சிறப்பு சொற்பொழிவு

உலகத் தாய்மொழி நாள் விழா

உலகத் தாய்மொழி நாள்: தமிழே நீ வாழ்ந்திடு! - முதல்வர் மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


