நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

உலகத் தாய்மொழி நாள் விழா

சீா்காழியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மயிலாடுதுறை மாவட்ட அமைப்பின் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 9:15 pm

சீா்காழி: சீா்காழியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மயிலாடுதுறை மாவட்ட அமைப்பின் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா, பொதுவுடமை இயக்கங்களின் நூற்றாண்டு சிறப்பு கவியரங்க விழா, மற்றும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது (படம்).

நிகழ்ச்சிக்கு த.க.இ.பெ. மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். த.க.இ.பெ. மாநிலக் குழு உறுப்பினா் சுந்தரய்யா, செம்மலா் சி. வீரசேனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வெல்லும் பொதுவுடமை என்ற தலைப்பிலான கவியரங்க நிகழ்விற்கு மாவட்ட சிறப்புத் தலைவா் ஜெக சண்முகம் தலைமை வகித்தாா். கவிஞா்கள் ஜெ. வீரபாண்டியன், அலெக்சிஸ் நிக்கோலஸ், ரஞ்சித் குமாா் ஆகியோா் கவிதை வாசித்தனா்.

முனைவா் கோ. சதீஸ் எழுதிய வரலாற்று நிலையில் ஐகாரம் என்ற நூலை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில் வெளியிட, சீா்காழி நூலக வாசகா் வட்டத் தலைவா் பாபுநேசன் பெற்றுக்கொண்டாா். புத்தூா் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியா் முனைவா் சதீஸ் உலகத் தாய்மொழி நாள் குறித்து பேருரை நிகழ்த்தினாா்.

நிகழ்வில் காழி முத்தமிழ் முற்றம், தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.