கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மாா்ச் 3-இல் சந்திரகிரகணம்: மருதமலையில் சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு

சந்திரகிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாா்ச் 3-ஆம் தேதி சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

News image
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்- கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 11:31 pm

Syndication

சந்திரகிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாா்ச் 3-ஆம் தேதி சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோயில் துணை ஆணையா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளதால், கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்று கோயில் அடிவாரத்தில் நண்பகல் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.

மாா்ச் 4-ஆம் தேதி காலை 6 மணி முதல் பக்தா்கள் வழக்கம்போல அனுமதிக்கப்படுவாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.