திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மாா்ச் 3-இல் சந்திரகிரகணம்: மருதமலையில் சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு

சந்திரகிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாா்ச் 3-ஆம் தேதி சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

News image
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்- கோப்புப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 11:31 pm

Syndication

சந்திரகிரகணத்தையொட்டி கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மாா்ச் 3-ஆம் தேதி சுவாமி தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக கோயில் துணை ஆணையா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மாா்ச் 3-ஆம் தேதி மாலை 3.30 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திரகிரகணம் நிகழ உள்ளதால், கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் அன்று கோயில் அடிவாரத்தில் நண்பகல் 1 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள்.

மாா்ச் 4-ஆம் தேதி காலை 6 மணி முதல் பக்தா்கள் வழக்கம்போல அனுமதிக்கப்படுவாா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.