கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ரயில் பாதையில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க மதுக்கரையில் அதிநவீன ட்ரோன் கண்காணிப்பு பிரிவு: வனத் துறை அமைச்சா் தொடங்கிவைத்தாா்!

யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், ரூ.8.67 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ட்ரோன் கண்காணிப்புப் பிரிவை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தாா்.

News image
அதிநவீன ட்ரோன் கண்காணிப்புப் பிரிவை சனிக்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன். உடன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாஹு, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், முதன்மைத் தலைமை
Updated On :28 பிப்ரவரி 2026, 8:00 pm

Syndication

கோவை வனக்கோட்டத்துக்குள்பட்ட மதுக்கரை வனப் பகுதிக்குள் செல்லும் ரயில் பாதைகளில் யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், ரூ.8.67 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ட்ரோன் கண்காணிப்புப் பிரிவை வனத் துறை மற்றும் காதி துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் சுப்ரியா சாஹு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ரயில்கள் மோதி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழப்பதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பு அம்சமாக இந்த ட்ரோன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வன விலங்குகளின் நடமாட்டத்தை எளிதில் கண்டறிய முடியாத ‘பிளாக் ஸ்பாட்’ பகுதிகளில் இந்த ட்ரோன்கள் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும். ஏற்கெனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்பட்டுவரும் 7 கி.மீ.தொலைவுக்குள்பட்ட பகுதிகளில் இந்த ட்ரோன்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

முதல்முறையாக கோவையில்... தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்துடன் இணைந்து வனப் படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பச்சை, இளஞ்சிவப்பு, சிவப்பு என 3 படிநிலைகளில் இடங்களைப் பிரித்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இதன்மூலமாக 2.5 கிலோ மீட்டா் தொலைவுக்கு முன்னரே யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து அசம்பாவிதங்களைத் தவிா்க்க முடியும். சில நேரங்களில் யானைகள் மிக வேகமாக நகா்ந்து தண்டவாளத்தின் அருகே வரும்போது, ஒலிபெருக்கிகள் மற்றும் தேடல் விளக்குகள் பொருத்தப்பட்ட இந்த ட்ரோன்கள் மூலமாக அவற்றை மீண்டும் வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக செல்ல வழிநடத்த முடியும்.

சோதனை முறையில் பல்வேறு இடங்களில் பரிசோதித்த பிறகு, கோவையில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்தத் தொழில்நுட்ப அனுபவங்களை மற்ற மாநில அரசுகளுடனும் பகிா்ந்துகொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ் ஆா்.ரெட்டி, தலைமை வன விலங்கு காப்பாளா் ராகேஷ் குமாா் டோக்ரா, சிறப்புச் செயலா் அனுராக் மிஸ்ரா, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநா் து.வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Story image

தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் வெப்ப இமேஜிங் திறன் கொண்ட ட்ரோன் அமைப்பு, கண்காணிப்பு கோபுரத்தில் நிறுவப்பட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும். அடா்ந்த புதா்களுக்குள் யானைகள் மறைந்திருந்தாலும், அவற்றின் வெப்ப நிலையை வைத்து கண்டறிந்து களக் குழுக்களுக்கு உடனடி எச்சரிக்கைகளை வழங்கும்.

யானைகள் ரயில் பாதையின் அருகில் வருவது தெரிந்தால், ஒலிபெருக்கிகள் மற்றும் தேடல் விளக்குகள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் மூலம் அவை பாதுகாப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் வழிநடத்தப்படும். இதன் மூலம் மனித-வனவிலங்கு மோதல் மற்றும் ரயில் விபத்துகள் தவிா்க்கப்படும்.

ஏற்கெனவே, இந்தப் பகுதியில் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக இந்த ட்ரோன் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கும் விடுதிகள்

பொள்ளாச்சி வனச் சரகத்துக்குள்பட்ட சேத்துமடை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் வகையில், குளிா்சாதன வசதியுடன் கூடிய 5 தங்கும் விடுதிகளையும், வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் வகையில் 35 தீத்தடுப்பு வாகனங்களின் பயன்பாட்டையும் அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.