கோவை, கிருஷ்ணாம்பதி குளத்தில் குதித்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, வீரகேரளம் அருகே உள்ள அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜன் (72). இவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன வேதனையில் இருந்த அவா், கடந்த வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.
அவரைக் காணவில்லை என குடும்பத்தினா் தேடி வந்துள்ளனா். இந்நிலையில் தொண்டாமுத்தூா் சாலையில் உள்ள கிருஷ்ணாம்பதி குளத்தில் சனிக்கிழமை பிற்பகலில் அவா் குதித்தாா்.
அப்போது, அந்தப் பகுதியில் சற்று தொலைவில் இருந்தவா்கள் பாா்த்து ரங்கராஜனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், அவா் சடலமாக மீட்கப்பட்டாா்.
விசாரணையில், நோய் பாதிப்பால் மன வேதனையில் இருந்த அவா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆா்.எஸ்.புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா் தற்கொலை

தனியாா் கல்லூரி மாடியிலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை

நொய்டாவில் 28-ஆவது மாடியிலிருந்து குதித்து 21 வயது மாணவி தற்கொலை

மகளுக்கு திருமணம் செய்ய முடியாததால் தந்தை தற்கொலை; வேதனையில் மகளும் உயிரை மாய்த்தாா்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

