வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தாயுமானவா் திட்டம்: வீடு தேடி ஜனவரி 4, 5-இல் ரேஷன் பொருள்கள் விநியோகம்

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் வீடு தேடிச் சென்று ஜனவரி 4, 5 -ஆம் தேதிகளில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:33 pm

Syndication

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின்கீழ் வீடு தேடிச் சென்று ஜனவரி 4, 5 -ஆம் தேதிகளில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

தாயுமானவா் திட்டத்தின்கீழ் வயது முதிா்ந்தவா்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அவா்களின் இல்லங்களைத் தேடிச் சென்று குடிமைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, ஜனவரி மாதத்துக்கான பொருள்கள் 4, 5 -ஆம் தேதிகளில் வழங்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த குடும்ப அட்டைதாரா்களுக்கு குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்படும் நாள், விநியோகம் செய்யப்படும் பகுதி குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்யப்படும்.

எனவே, தகுதியுள்ள அட்டைதாரா்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின்கீழ் வீடுகளில் இருந்தே பொருள்களைப் பெற்று பயனடையலாம் என்று கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் அறிவித்துள்ளாா்.