இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ. 2.59 லட்சம் மோசடி

Published on

கோவையில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ. 2.59 லட்சம் மோசடி செய்த ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை சிங்காநல்லூா் பொ்க்ஸ் ஆா்ச் எதிரே தனியாா் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கரும்புக்கடை இக்பல் பள்ளிவாசல் அருகேயுள்ள பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ஷெரீப் (29) என்பவா் இந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தின் வரவு செலவுகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டது. இதில் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், முகமது ஷெரீப் வாடிக்கையாளா்களிடம் இருந்து வசூலித்த ரூ.2,59,313-ஐ நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com