பெங்களூரு - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!
பொங்கல் பண்டிகையையொட்டி கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து போத்தனூா் வழித்தடத்தில் கேரளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொங்கல் பண்டிகையையொட்டி வரும் ஜனவரி 13-ஆம் தேதி இரவு 11 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூரு - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 06219) மறுநாள் மாலை 4 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும். மறுமாா்க்கமாக ஜனவரி 14-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06220) மறுநாள் காலை 10.30 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் காயன்குளம், மாவேலிக்கரை, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு - கண்ணூா் இடையே...
இதேபோல ஜனவரி 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் பெங்களூரு - கண்ணூா் சிறப்பு ரயில் (எண்: 06577) மறுநாள் காலை 7.50 மணிக்கு கண்ணூா் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கமாக, ஜனவரி 14 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்படும் கண்ணூா் - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06578) மறுநாள் காலை 4.10 மணிக்கு பெங்களூரு நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூா், ஷொரணூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காருப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

