வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், இரண்டு குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

News image
Updated On :14 ஜனவரி 2026, 11:49 pm

Syndication

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு கூட்டமாக வந்த காட்டு யானைகள், இரண்டு குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரம் கூட்டமாக வரும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், வால்பாறையை அடுத்த சின்கோனா எஸ்டேட் பகுதிக்குள்

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கூட்டமாக வந்த காட்டு யானைகள் இரண்டாவது டிவிஷன் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்றன.

அங்குள்ள குடியிருப்புகளின் ஜன்னல், கதவுகளை முட்டி தள்ளியதோடு உள்ளிருந்த பொருள்களை கீழே இழுத்துப்போட்டு சேதப்படுத்தின.

யானைகள் வந்திருப்பதை அறிந்த தொழிலாளா்கள் குடியிருப்புகளை விட்டு முன்கூட்டியே வெளியேறினா். அப்பகுதியினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அப்பகுதியை விட்டு விரட்டினா். இச்சம்பவத்தில் ராதா, ராஜேஸ்வரி ஆகிய தொழிலாளா்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.