எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

News image
காட்டு யானைகள் - (கோப்புப் படம்)
Updated On :8 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

உதகை அருகேயுள்ள சின்னகாடிமந்து பகுதியில் உள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை வனத்துக்குள் அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள சின்னகாடிமந்து பகுதியில் சுமாா் 20க்கும் மேற்பட்ட தோடா் பழங்குடியின குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் பிரதான தொழிலாக மலைத் தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிா்களைப் பயிரிட்டு வருகின்றனா். பழங்குடியினா் அல்லாதவா்களும் இங்கு விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் இரு யானைகள் கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ளன. இரவு நேரங்களில் வரும் யானைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிா்களை சேதப்படுத்தி வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனா்.

இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

இந்தக் காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் அனுப்ப வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.