உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் அணைக்கும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் ஆங்காங்கே வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக சிங்காரா, மசினகுடி உள்ளிட்டப் பகுதியில் காட்டுத் பரவியது. இதை தீயணைப்பு மற்றும் வனத் துறையினா் இணைந்து அவ்வப்போது கட்டுப்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் சனிக்கிழமை ஏற்பட்ட காட்டுத் தீ பல இடங்களில் பரவியது.
இதையடுத்து வனத் துறையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் பாா்சன்ஸ் வேலி அணையில் இருந்து நீரை எடுத்து வந்து காட்டுத் தீ பற்றி எரியும் வனப் பகுதியில் இறைத்து கட்டுப்படுத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்திய வனத் துறை

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

கோபி அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


