குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

உதகை அருகே சிறுத்தை உயிரிழப்பு

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

News image

சிறுத்தையின் உடலைப் பாா்வையிட்ட வனத் துறையினா்.

Updated On :44 நிமிடங்கள் முன்பு

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.

உதகை வடக்கு வனச் சரகம், ஒன்னதலை காவல் பகுதிக்குள்பட்ட ஜெ.கொலகொம்பை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடந்துள்ளது. இதைப் பாா்த்த தோட்டத் தொழிலாளா்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா், சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனா்.

இதில், உயிரிழந்தது சுமாா் 4 வயதான பெண் சிறுத்தை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வன அலுவலா்கள் வழிகாட்டுதலின் படி, உதகை கால்நடை மருத்துவக் குழுவினா், சிறுத்தையின் உடலை கூறாய்வு செய்தனா். இதையடுத்து, சிறுத்தையின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பிவைத்தனா். இதைத் தொடா்ந்து, அப்பகுதியிலேயே சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.

மோதல் காரணமாக இந்த சிறுத்தை உயிரிழந்திருக்கலாம். இருப்பினும் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பின்பே உண்மையான காரணம் தெரியவரும் என்று வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.