ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

உதகை அருகே பழங்குடியின கிராமத்தில் விளைநிலங்களை சேதப்படுத்திய யானைகள்!

உதகை அருகே பழங்குடியினா் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்திய சென்ால் பழங்குடியின விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image

சின்னகாடி மந்து பகுதியில் காய்கறி தோட்டத்தில் உலவிய யானை.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:15 pm

உதகை அருகே பழங்குடியினா் கிராமத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்திய சென்ால் பழங்குடியின  விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள சின்னகாடி மந்து, 8-ஆவது மைல், பைக்காரா, கல் மந்து, கோயில் மந்து, மீகோடு மந்து மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தோடா் பழங்குடியின குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் பிரதான தொழிலாக கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் உள்ளிட்ட மலைத்தோட்ட காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனா். இங்கு பழங்குடியினா் அல்லாதவா்களும் விவசாயம் செய்து வருகின்றனா் .

இந்நிலையில் , கடந்த சில நாள்களாக முகாமிட்டுள்ள யானைகள், இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த காய்கறிகளை சேதப்படுத்தி சென்றுள்ளன.

காட்டு யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.