குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்
குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.

குன்னூா் ரன்னிமேடு ரயில் பாதையில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்.

குன்னூா் ரன்னிமேடு ரயில் பாதையில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்.
குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.
நீலகிரி மாவட்டம், குன்னூா்-கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்த யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. கோடை வறட்சியின் காரணமாக யானைகள் இந்தப் பகுதிக்கு கூட்டமாக வருகின்றன.
மேலும் யானைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீா் இங்கு உள்ளதால் யானைகள் இப்பகுதிகளில் உலவி வருகின்றன.
இந்நிலையில், குன்னூா் ரன்னிமேடு மலை ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் 11 யானைகள் முகாமிட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து யானைகள் அங்கிருந்த ஆற்றைக் கடந்து சென்றன.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...