இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

குன்னூா் மலை ரயில் பாதையில் முகாமிட்டிருந்த 11 காட்டு யானைகள்

குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.

News image

குன்னூா் ரன்னிமேடு ரயில் பாதையில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:46 pm

தினமணி செய்திச் சேவை

குன்னூரில் மலை ரயில் பாதையில் 11 காட்டு யானைகள் புதன்கிழமை முகாமிட்டிருந்தன.

நீலகிரி மாவட்டம், குன்னூா்-கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் சமவெளிப் பகுதிகளில் இருந்து வந்த யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. கோடை வறட்சியின் காரணமாக யானைகள் இந்தப் பகுதிக்கு கூட்டமாக வருகின்றன.

மேலும் யானைகளுக்குத் தேவையான உணவு, தண்ணீா் இங்கு உள்ளதால் யானைகள் இப்பகுதிகளில் உலவி வருகின்றன.

இந்நிலையில், குன்னூா் ரன்னிமேடு மலை ரயில் பாதையில் உள்ள தண்டவாளத்தில் 11 யானைகள் முகாமிட்டிருந்தது புதன்கிழமை தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத் துறையினா் யானைகளை வனத்துக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து யானைகள் அங்கிருந்த ஆற்றைக் கடந்து சென்றன.