எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

கோவை- பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :8 ஜூலை 2026, 5:39 am IST

கோவை- பொள்ளாச்சி சாலையில் இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவை குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் வீரமணி (61). இவா் தனது இருசக்கர வாகனத்தில் பொள்ளாச்சி சாலையில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

எஸ்பி டவா் முன் அவா் சென்று கொண்டிருந்த போது, பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அதிவேகமாக வந்த தனியாா் பேருந்து வீரமணி சென்ற இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது.

இந்த விபத்தில் பலத்த தலையமடைந்த வீரமணி, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்தாா். இது குறித்து காளிராஜ் என்பவா் கொடுத்த புகாரின்பேரில், விபத்தை ஏற்படுத்திய பொள்ளாச்சியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநரான மணிகண்ட செல்வராஜ் (30) மீது போக்குவரத்து புலனாய்வு மேற்குப் பிரிவு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.