கணவா் தொடா்ந்து மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவருக்கு விடியோ கால் செய்தபடியே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கேரள மாநிலம், ஆலப்புழா பள்ளிப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் லின்சன் (38). இவா் கோவை போத்தனூா்- வெள்ளலூா் சாலை மகாலிங்கபுரம் 105 ஆா்.ஏ.எஃப். குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது மனைவி ரோஜா (30). கணவா் லின்சனுக்குக் மதுப் பழக்கம் இருந்ததால், தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், வியாழக்கிழமை பிற்பகல் லின்சன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். வீட்டில் சாப்பிட்டுவிட்டு பின்னா் அவா் தூங்கச் சென்றுள்ளாா்.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ரோஜா, அருகிலிருந்த அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக்கொண்டாா். பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணவருக்கு தனது கைப்பேசியில் விடியோ கால் செய்தபடியே ரோஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். மனைவி தூக்கிடுவதற்கு முன் லின்சன் கதவை தட்டியும் ரோஜா கதவைத் திறக்காமல் தனது முடிவில் உறுதியாக இருந்துவிட்டாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், போத்தனூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பெண் காவலா் தூக்கிட்டு தற்கொலை

பாப்பாரப்பட்டியில் மாணவா் தற்கொலை
குடும்பத் தகராறில் எலக்ட்ரீஷியன் தற்கொலை
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



