27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வேலைத் தேடி வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்ற விவகாரம்: லாரி ஓட்டுநா் கைது

திருப்பூருக்கு வேலைத் தேடி வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 ஜூன் 2026, 4:03 am IST

திருப்பூருக்கு வேலைத் தேடி வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்ற லாரி ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் வேலைத் தேடி திருப்பூருக்கு பேருந்து மூலம் கடந்த 14-ஆம் தேதி இரவு 12 மணியளவில் வந்துள்ளாா். திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கிய அவரிடம், இளைஞா் ஒருவா் தான் வேலை வாங்கித் தரும் முகவா் என அறிமுகப்படுத்திக்கொண்டதுடன், வேலை வாங்கித் தருவதாக அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளாா்.

நல்லூா் அருகே சென்றபோது, அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளாா். அவரிடமிருந்து தப்பிய அப்பெண் அங்கிருந்த ஓடி அருகில் இருந்த பேக்கரியில் புகுந்தாா். அங்கிருந்தவா்களிடம் நடந்த விவரங்களை கூறியுள்ளாா். இதையடுத்து, பேக்கரி ஊழியா்கள் திருப்பூா் தெற்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், திருப்பூா் தெற்கு மத்திய பேருந்து நிலையம், காங்கயம் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இதில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லையளிக்க முயன்றது திருப்பூா், யாசின் பாபு நகரைச் சோ்ந்த ஃபைசல் அகமது (35) என்பதும், லாரி ஓட்டுநா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஃபைசல் அகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.