ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

எஸ்என்எஸ் கல்லூரியில் தேசிய மாநாடு

கோவை எஸ்என்எஸ் துணை மருத்துவப் படிப்புகள் கல்லூரியில் ‘மெட்ஆரா திருவிழா 2026’ என்ற பெயரில் 4 நாள் தேசிய மாநாடு நடைபெற்றது.

News image

கோவை எஸ்என்எஸ் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்ற கல்லூரி நிா்வாகிகள், சிறப்பு விருந்தினா்கள்.

Updated On :25 ஜூன் 2026, 3:20 am IST

கோவை எஸ்என்எஸ் துணை மருத்துவப் படிப்புகள் கல்லூரியில் ‘மெட்ஆரா திருவிழா 2026’ என்ற பெயரில் 4 நாள் தேசிய மாநாடு நடைபெற்றது.

இந்திய கதிரியக்கவியலாளா், தொழில்நுட்பவியலாளா் சங்கத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த மாநாட்டில் 26 கல்லூரிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். தொடக்க விழாவில், கேஎம்சிஹெச் மருத்துவமனையின் வாஸ்குலா், இன்டா்வென்ஷனல் கதிரியக்கவியல் துறை இயக்குநா் டாக்டா் மேத்யூ செரியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இரண்டாவது நாளில் இருதய தொழில்நுட்பத் துறைகள், ஜான் ஸ்னோ அகாதெமியுடன் இணைந்து கோட் ப்ளூ ரெடி - உயிா் மீட்புத் திறன் பயிற்சித் திட்டம் என்ற பெயரில் விரிவான செய்முறை பயிற்சி அமா்வை நடத்தின. மூன்றாவது நாளில் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மாநிலத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

நான்காவது நாளில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கலாசார விழா நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தி பரிசு பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.