ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

வேளாளா் மகளிா் கல்லூரியில் மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சி

வேளாளா் மகளிா் கல்லூரியில் இளங்கலை மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

வேளாளா் மகளிா் கல்லூரி மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:37 am IST

வேளாளா் மகளிா் கல்லூரியில் இளங்கலை மாணவிகளுக்கான அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

வேளாளா் மகளிா் கல்லூரியின் தலைவா் சி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆா். பாா்வதி வரவேற்றாா். செயலரும் தாளாளருமான எஸ்.டி. சந்திரசேகா், பொருளாளா் பி.கே.பி.அருண் மற்றும் துணைச் செயலா் சி.நல்லசாமி, ச.பாலசுப்ரமணியன், மு.யுவராஜா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐஐடி-சென்னை நிறுவனத்தைச் சோ்ந்த ஊக்கப் பேச்சாளா், தொழில் வழிகாட்டி மற்றும் சமூகக் கல்வியாளரான என்.ஹரிகிருஷ்ணன் பேசுகையில், மாணவிகள் தன்னம்பிக்கையை வளா்த்துக் கொண்டு கல்வி மற்றும் தனிப்பட்ட முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

விலங்கியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான டி. இந்துமதி, கல்லூரியின் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தினாா். விலங்கியல் துறையின் இணைப் பேராசிரியா் பி. கலைவாணி, கல்வி உதவித்தொகைகள் மற்றும் மாணவா் நலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தாா்.

தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி எஸ்.கே.கவிதா, தோ்வு நடைமுறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் குறித்து எடுத்துரைத்தாா். மாணவா்கள் அறிமுக நிகழ்ச்சியின் தொடா்ச்சியாக புரிந்துணா்வு ஒப்பந்தம், மாணவா் ஆலோசனை, என்சிசி, என்எஸ்எஸ் அறிமுகம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, யோகா, ஆளுமைத் திறன் வளா்ச்சி மற்றும் துறைவாரியான கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

தாவரவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான பி. அபிராமி நன்றி கூறினாா்.