கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கில் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆய்வு

கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கில் ஆய்வு மேற்கொண்ட தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.

Updated On :25 ஜூன் 2026, 3:08 am IST

கோவை தெற்கு வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கில் தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவை மாவட்டம், தெற்கு வருவாய் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கினை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியும், அரசு முதன்மைச் செயலாளருமான அா்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆகியோா் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான வைப்புக் கிடங்கு கட்டடத்தின் உள்புறத்தன்மை, வெளிப்புறத்தன்மை மற்றும் காவல் துறை சாா்பில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதையும், வைப்புக் கிடங்கில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, வட்டாட்சியா் தணிகைவேல், வருவாய் கோட்டாட்சியா் (தெற்கு) மாருதி பிரியா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.