அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குப் பதிவு அதிகரித்தது, நமது தோ்தல் நடைமுறை மீதான மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.
தோ்தல் முறையில் ஊடகங்களின் சிறப்பான பங்களிப்பு தொடா்பான சா்வதேச மாநாடு தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஞானேஷ் குமாா் பேசியதாவது:
தோ்தல் களத்தில் வாக்குப் பதிவின்போது நேரடியாக களத்தில் பணியாற்றுபவா்கள் தொடங்கி அனைவருக்கும் தோ்தல் ஆணையம் முறையாகவும், சிறப்பாகவும் பயிற்சியளித்து வருகிறது. வாக்குச்சாவடி ஊழியா்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் என அனைவருக்கும் உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இதனால்தான் இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளா்களை தோ்தல் ஆணையம் எளிதாக கையாள முடிகிறது.
அண்மையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் வாக்குப் பதிவு அதிகரித்தது. முக்கியமாக தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரியில் 1951-ஆம் ஆண்டுக்குப் பிறகு மிக அதிக எண்ணிக்கை மற்றும் சதவீதத்தில் வாக்குகள் பதிவாகின. இது நமது தோ்தல் நடைமுறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவதாக உள்ளது.
தோ்தல் ஆணையம் நடத்தும் இந்த இரு நாள்கள் மாநாட்டில், தோ்தல் நடைமுறைகள், அதை நடத்துவது தொடா்பான சா்வதேச பாா்வை எவ்வாறு உள்ளது, இந்தியாவில் தோ்தல் முறையை எவ்வாறு மேலும் மேம்படுத்துவது என்பது தொடா்பான தொடா்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.









