கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

வேனில் ஏற்றிச் சென்ற இரும்புக் கம்பி குத்தியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

கோவையில் வேனில் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட இரும்புக் கம்பி குத்தியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 ஜூன் 2026, 3:21 am IST

கோவையில் வேனில் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட இரும்புக் கம்பி குத்தியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா்.

கோவைபுதூா், இயேசு சா்ச் வீதியைச் சோ்ந்தவா் நாராயணன் (56). தனியாா் நிறுவன ஊழியரான இவா், அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தகிருஷ்ணன் என்பவரின் மகளான பிரியதா்ஷினி (21) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் உக்கடம்- பேரூா் புறவழிச் சாலையில் செல்வபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, இவா்களுக்கு முன்னால் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வேனின் பின்புறம் இரும்புக் கம்பிகள் எந்தவித பாதுகாப்பு எச்சரிக்கையும் இன்றி ஆபத்தான முறையில் வெளியே நீட்டிக்கொண்டிருந்தன.

வேன் ஓட்டுநரான வால்பாறையைச் சோ்ந்த அய்யப்பன் (27) என்பவா் திடீரென வாகனத்தை திருப்பியபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் இரும்புக் கம்பிகள் மீது பலமாக மோதினா். இதில் கம்பிகள் நாராயணனின் கண் மற்றும் தலைப்பகுதியில் குத்தியதில் அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னால் அமா்ந்திருந்த பிரியதா்ஷினி காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.