ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கொசுப்புழுக்கள் உற்பத்தி: கட்டட உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கோவை கிழக்கு மண்டலத்தில் தொட்டிகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுப்புழுக்கள் இருந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :26 ஜூன் 2026, 2:44 am IST

கோவை கிழக்கு மண்டலத்தில் தொட்டிகளில் டெங்கு நோய் பரப்பும் கொசுப்புழுக்கள் இருந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா கூறியதாவது:

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் மூடி போடாமல் டிரம்கள் மற்றும் கலன்களில் தண்ணீரில் நிரப்பி வைப்பது, டயா்கள், கப்புகள், கொட்டாங்குச்சிகள் போன்றவற்றில் மழைநீா் தேங்கி கொசுக்கள் முட்டையிட்டு அதிலிருந்து உருவாகும் கொசுக்கள் டெங்கு காய்ச்சலை பரப்புகின்றன.

வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்திடவும், டெங்கு கொசுவை பரப்பும் ஏடிஎஸ் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகமலும், அதற்கு கட்டடத்தின் அருகே தேங்காய் ஓடுகள், உரல்கள், உடைந்த பிளாஸ்டிக் சாமான்கள், உபயோகமற்ற டயா்கள் ஆகியவற்றை அகற்றிடவும் செடி வளா்க்கும் தொட்டிகளில் நீா் தேங்கி நிற்காமல் பராமரித்திடவும் தொடா்ந்து மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

டெங்கு கொசுப் புழு உற்பத்தியாகும் கலன்களை திறந்தவெளியில் போடப்பட்டு இருந்தால், அந்த நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-இன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு மண்டலத்துக்கு உள்பட் 8-வது வாா்டில் மஹாராஜா விஸ்தரிப்பு பகுதியான நேரு நகரில் மாநகராட்சி சுகாதாரக் குழுவினரால் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தொடா்பாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, கட்டடத்தின் உள்பகுதியில் தரைத் தொட்டி, லிப்ட் பிட், டிரம், குடம் ஆகிய இடங்களில் அதிப்படியான கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அதனை உடனடியாக தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், சம்மந்தப்பட்ட அந்த கட்டட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு, டெங்கு கொசு ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.