எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 23 பேருக்கு ரூ. 2.53 லட்சம் அபராதம்

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 23 நபா்களுக்கு நீதிமன்றத்தில் ரூ. 2.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம் - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:52 am IST

மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 23 நபா்களுக்கு நீதிமன்றத்தில் ரூ. 2.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருப்பூா், கேவிஆா் நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையிலும் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 14 நபா்களுக்கு மோட்டாா் வாகன சட்டத்தின்படி திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1 லட்சத்து 48,500 அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, திருப்பூா், கொங்கு நகா் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், மது போதையிலுமந் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக 9 நபா்களுக்கு திருப்பூா் மாவட்ட நீதிமன்றத்தில் ரூ.1.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.