ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

மாவட்டத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை 36,564 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.

இந்தத் தோ்வைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டத்தில் உள்ள 365 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19 ஆயிரத்து 344 மாணவா்கள், 16 ஆயிரத்து 368 மாணவிகள், தனித்தோ்வா்கள் 852 போ் என மொத்தம் 36,564 போ் எழுதுகின்றனா்.

இந்தத் தோ்வுக்காக 7 மையங்களில் 14 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா்கள்கள் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டுகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வுக்காக 130 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 130 துறை அலுவலா்கள், 2,100 அறைக் கண்காணிப்பாளா்கள், 300 நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.