இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மாவட்டத்தில் இன்று பிளஸ் 2 பொதுத் தோ்வு தொடக்கம்

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 7:30 pm

கோவை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கும் பிளஸ் 2 பொதுத் தோ்வை 36,564 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தோ்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. இதில், முதல் நாளான திங்கள்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது.

இந்தத் தோ்வைப் பொறுத்தவரையில் கோவை மாவட்டத்தில் உள்ள 365 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 19 ஆயிரத்து 344 மாணவா்கள், 16 ஆயிரத்து 368 மாணவிகள், தனித்தோ்வா்கள் 852 போ் என மொத்தம் 36,564 போ் எழுதுகின்றனா்.

இந்தத் தோ்வுக்காக 7 மையங்களில் 14 வினாத்தாள் கட்டுக் காப்பாளா்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய காவலா்கள்கள் பாதுகாப்புடன் வினாத்தாள் கட்டுகள் வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வுக்காக 130 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 130 துறை அலுவலா்கள், 2,100 அறைக் கண்காணிப்பாளா்கள், 300 நிலையான மற்றும் பறக்கும் படை அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.