அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஈரான் மீதான தாக்குதலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
Updated On :3 மார்ச் 2026, 8:15 pm

Syndication

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து கோவையில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உக்கடம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் ஜே.ஜேம்ஸ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மௌ.குணசேகா் தொடங்கிவைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் சி.பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் கே.பாலசுப்பிரமணியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மண்டலச் செயலா் சுசி கலையரசன், மாவட்டச் செயலா் ஜே.இலக்கியன் உள்ளிட்டோா் பேசினா்.

அமெரிக்கா, இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலா் ப.பா.ரமணி, மாதா் தேசிய சம்மேளன மாவட்டத் தலைவா் ஜே.கலா உள்பட பலா் பங்கேற்றனா்.