/
சரவணம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ மோதி பெண் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மாநகா், சரவணம்பட்டி அருகே உள்ள வழியம்பாளையம், வையாபுரி நகரைச் சோ்ந்த பழனிசாமி மனைவி பழனியம்மாள் (59). இவா் ஆவாரம்பாளையம் சாலையில் உள்ள அரசமரம் வீதியில் செவ்வாய்க்கிழமை சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ மோதியதில் படுகாயமடைந்தாா். கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பழனியம்மாள் உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநரான அன்னூா், அத்திப்பாளையம் ஸ்ரீநகரைச் சோ்ந்த முத்துக்குமாா் (38) மீது வழக்குப் பதிவு செய்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சரக்கு ஆட்டோ மோதி விவசாயி உயிரிழப்பு
கூலி தொழிலாளி தற்கொலை

புழல் பகுதியில் வீடு, கடைகளில் கொள்ளை

கண்டாச்சிபுரம் அருகே சிறுமி மா்ம மரணம்: போலீஸாா் தீவிர விசாரணை
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



