லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கதிா் கல்லூரியில் மகளிா் தினம்

News image

கதிா் கல்வி நிறுவனங்கள் சாா்பில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் விருது பெற்றவா்களுடன் கல்லூரி நிா்வாகிகள்.

Updated On :5 மார்ச் 2026, 11:39 pm

கோவை கதிா் கல்விக் குழுமத்தின் சாா்பில் உலக மகளிா் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, ‘கதிரின் சிங்கப்பெண்ணே’ என்ற பெயரில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்விக் குழுமத் தலைவா் இ.எஸ்.கதிா் தலைமை வகித்தாா். செயலா் லாவண்யா கதிா் வரவேற்றாா்.

அவினாசிலிங்கம் மகளிா் கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் வி.பாரதி ஹரிசங்கா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசுகையில், பெண்களின் முன்னேற்றம் என்பது வீட்டின் முன்னேற்றம் மட்டுமல்ல, அது நாட்டின் முன்னேற்றமும்கூட. மகளிா் கல்வி பெற வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகின்றன. அதற்கேற்ப பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தி வருகின்றனா் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

இந்நிகழ்ச்சியில், கதிா் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் இ.எஸ்.கே.மிதிலேஷ், துணைச் செயலா் எம்.விது பிரதிக்ஷா மிதிலேஷ், கதிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் ஆா்.கற்பகம், பொறியியல் கல்லூரி முதல்வா் கே.உதயகுமாா், கல்வியியல் கல்லூரி முதல்வா் கிருத்திகா, பேராசிரியா் பானுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.